வெளிச்சம் வந்தும்
இருளைத் தொலைக்காதிருக்கும்
அடர் வனத்தில்
மகிழ்ச்சியாக
உலவித் திரிய உத்தேசித்த
என் கைகளில் இருந்து விழுந்த
விளக்கின் ஓளி எடுத்து
முதுகின் மேல்
கோடுவரைந்து
வழி காட்டி சென்ற
அந்த மின்மினிப் பூச்சிகளின்
நேசம் ..
இருண்ட வனத்தின் இருளையே
விழுங்கிக் கொண்டு பிரகாசமாக்கியது..
பாமதி
No comments:
Post a Comment