( தகிப்பு )
பழுத்த செம்மஞ்சள் இலை
சலசலத்த நதியில் விழ
காற்றின் திசையில் இலை
சேர்ந்தே ஆடி அசைந்து மிதந்து
அதே நீரோடு திசையில்...
விளிம்பில் வடியத் தொடங்கிய
நதியின் நீரோடு வந்த இலை
விழுந்து விடமால் நின்று விட
மனதடையில் இலை
விழுமா....விழாதா....
பட படக்கும் என் இதயம்
மன இருப்பு கொள்ளாமல்
விளிம்பை எட்டிப் பார்க்க
அதிசயம்-
இலை அமைதியாக
ஒரு குழந்தையின் பிஞ்சு கால்கள்
அண்டிக் கொண்டதை போல...
இலை நீரை தன்னிலிருந்து
வடித்துக் கொண்டிருந்தது ஓசை காற்றுடன்.
அது எதையோ புறு புறுத்துக் கொன்டது
அமைதி அக்கணத்தை நிரப்பியது
என்னுள்.
இயற்கை தனக்குள் செய்து கொள்ளும் உடன்படிக்கைகள்
பரிமாற்றங்கள் அலாதியான இயக்கம் தானோ?
சூரிய ஓளிகீற்று
சலசலத்து ஒடும் நீர் மிதும்
பழுத்த மஞ்சள்இலைமிதும்
தவழ்ந்து விளையாடி....
தன்னையும்-என்னையும்
உதவியாக மாற்றி வடிந்த நீரில்
இந்த இலை எத்தனை நாட்கள்
இந்த விளிம்பில் அமர்ந்திருக்கும்?
அல்லது நீரோடு சேர்ந்து
கீழே விழ்ந்து போகுமோ...
எதுவும் நடக்கலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக புரிந்த
இயற்கையின் பரி பாஷையில்
நேசமிருப்பதாகவே உள்ளது
எனக்கும்-அந்த இலைக்கும்