புழு சுருண்டு
சகதியில் விழுந்து
தலைமோதிய கணம்
மண்ணுக்கடியில் சிதறித்
தூவித் தெறித்த மகரந்தங்கள்
பூக்க தவறியதால் ஏதோ வலி
காற்றில் கடைசிவரை
அப்பி பிடித்திருக்கின்றது
மசுக்குட்டி தன் மயிர்களை
உதிர்க்கும்
இலையுதிர் காலத்திற்கு பின் பனி நிலமெல்லாம் உறைந்ததால் வெளி
வர முடியாத விதைகளின் இயலாமை
எங்குமே தடயங்கள் பரப்பி
வியாப்பித்திருக்க
காலத்தின்
நாட்கள் மட்டும் காத்திருக்கவில்லை
வசந்த காலத்தில்
பட்டாம் பூச்சிகள்
மறுபடியும் பறக்கும்
என்ற கனவுகளை
காவிக் திரிந்து
தொலைத்து விட்டது
ஊனமான
வண்டுகளின் உர்வலம்
மட்டுமே
எஞ்சியுள்ள இன்றைய
பிரதிபலிப்பு.
பாமதி சோமசேகரம்
மெளனத்தையும் கவித்துவத்தோடு மொழிபெயர்க்க கவிஞர்களால் மட்டுமே முடியும் போலும்.
ReplyDeleteஏமாற்றங்களையும் வலிகளையும் காலத்தின் கட்டளைகளையும் அதற்குள் பொதித்து வைத்திருக்கிறது அந்தக் கவித்துவ மெளனம்!
மெளன மொழி பேசப்படாமலே உணரப்படலாம் சிலவேளைகளில்
ReplyDelete