கோடுகளுக்குள்ளே
நிறங்களை தேக்கி வைக்கும்
மானிடம் சுயம் தொலைத்தாலும்
எங்கோ ஒரு புள்ளியில் மறுபடியும்
விழித்துக் கொள்கின்றது.
சதுரங்க குதிரையின் போராட்டமும்
இறுதியில் முடிந்துதான் போகிறது.
நிறங்களில் தொலைந்து
கணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞனுக்கு
சுயமே ஒரு அடையாளம்தான்
இந்த ஓவியத்தை போல்..
பாமதி சோமசேகரம்
Photography website
எனக்கு இந்தக் கவிதையை விளங்கிக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயம் தானே கவிஞை அடையாளம்? ஆனால் கவிதை அப்படியே இருக்கட்டும்.அது அவ்வாறு இருப்பதே அதன் அழகு. சில கவிதைகள் தேங்காய் மாதிரி. அவரவர் உடைத்து அவரவருக்குத் தக்கதாக பொருள் எடுத்துக் கொள்ளட்டும்.
ReplyDeleteஆமாம் உண்மைதான்..எம் சிந்தனைக் கூடாகத்தான் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அதுதான் கவிதைக்கு மேலும் அழகு
ReplyDeleteசேர்க்கும்.